Published On:Tuesday, March 1, 2016
Posted by We Are Anonymous

இரண்டு வட்ஸ்அப்கள் பயன்படுத்த கூடிய ஜியோனியின் புதிய படைப்பு




ஜியோனி மொபைல் நிறுவனம் தனது புதிய தயாரிப்பாக இரண்டு வட்ஸ்அப் அப்லிகேஷன்களை பயன்படத்த கூடிய முறையிலான ஸ்மார்ட் கைத்தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கைத்தொலைபேசிக்கு எஸ் 8 என்று பெரியடப்பட்டுள்ளது.

ஐ போன்களில் பயன்படுத்தப்படும் 3டி தொடுதிரை வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அண்ட்ரொய்டு 6.0 மார்ஷ்மாலோ இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனில் இரண்டு சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் வசதி மற்றும் 64 ஜிபி உள் நினைவகம் என்பவற்றைக் கொண்டள்ளது.

மேலும், இந்த கைத்தொலைபேசி 4ஜிபி சுயுஆ வசதி, 3000 அயுh பெட்டரி, 16 மெகா பிக்சல் பின்புற கேமரா, 8 மெகா பிக்சல் முன்பக்க கேமரா போன்ற வசதிகளை உள்ளடக்கியது.

தற்பொழுது ஸ்பெயினின் பார்சிலோனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், மிக விரைவில் சர்வதேச அளவில் விநியோகம் செய்யப்படும் என்று ஜியோனி மொபைல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments for " இரண்டு வட்ஸ்அப்கள் பயன்படுத்த கூடிய ஜியோனியின் புதிய படைப்பு"

Leave a reply